கலெக்டர் ஆய்வு பெரம்பலூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

பெரம்பலூர், ஜன 24: பெரம்பலூரில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் நகர இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த நபரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரம்பலூர் ஆலாம்பாடி சாலை சமத்துவபுரத்தைச் சேர்ந்த நவாத் பாட்ஷா மகன் முகமது மாலிக் பாட்ஷா(24) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 100 கிராம் எடைக்கொண்ட ரூ.ஆயிரம் மதிப்புள்ள 10 கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: