×

பொதுமக்கள் மிரட்டியதால் பைக்கை விட்டு தப்பிய 2 பேர் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும்

கொள்ளிடம், ஜன. 24: கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் பணி ஓய்வுபெற்ற பக்கிரிசாமி என்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேற்று இறந்தார். இந்த இறுதி சடங்கில் பங்கேற்ற தமிழ்நாடு காவல்துறை காவலர்கள் சங்க முன்னாள் துணைத்தலைவர் வீரமணி கூறுகையில், பணியில் இருக்கும்போது போலீசார் இறந்துவிட்டால் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படுகிறது. ஆனால் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு அரசு மரியாதை வழங்குவதில்லை. 58 வயது வரை அரசுக்கு அர்ப்பணிப்போடு பணி செய்த காவலரின் நிலை இதுதான். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதை கனிவோடு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவலர்கள் அணியக்கூடிய சீருடைகளை செக்யூரிட்டியாக பணியில் இருப்பவர்கள் அணியக்கூடாது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் என்னால் தொடரப்பட்ட வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த வாய்தாவின்போது நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்போவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். எனவே நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாகவே நிறைவேற்றும் வகையில் முதல்வரே ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

Tags : government ,public ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...