×

திருச்செங்கோட்டில் 450 மூட்டை மஞ்சள் 15 லட்சத்திற்கு ஏலம்

திருச்செங்கோடு, ஜன.24:திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 450 மூட்டை மஞ்சள் ₹15 லட்சத்திற்கு விற்பனையானது. ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் விற்பனைக்கு வந்தது. மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 35க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.  டெண்டர் மூலம் ₹15 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ₹6012  முதல் ₹6500 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ₹5102 முதல் ₹5899 வரை விலைபோனது. பனங்காளி ₹9099 முதல் ₹12933 வரை விற்பனையானது.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்