தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் விவேகானந்தா வித்யா பவன் மாணவிகள் தேர்வு

திருச்செங்கோடு, ஜன.24: ஆந்திரா மாநிலம் ஓங்கோலில் நடந்த தென்னிந்திய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநில அணிகள் விளையாடின. இதியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, தேசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்ற திருச்செங்கோடு விவேகானந்தா வித்யா பவன் பயிற்சி மைய 4 மாணவிகள் நவீனா, ஓவியா, ஜெயகார்த்திகா, நந்தினி ஆகியோரை விவேகானந்தா கல்லூரிகளின் தலைவர் கருணாநிதி, மேலாண் இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை மேலாண் இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், துணைசெயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணை தாளாளர் டாக்டர் கிருபாநிதி, செயல் இயக்குனர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், இயக்குனர் குப்புசாமி, சேர்க்கை இயக்குனர் வரதராஜன் மற்றும் முதல்வர்கள் பாராட்டி வாழ்த்தினர்.   ...

Related Stories: