×

தாய், மகள் மாயம்

திருச்செங்கோடு, ஜன.24: : திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி கென்யா நகரைச் சேர்ந்தவர் குமார்(45), வேன் டிரைவர்.  இவரது மனைவி கார்த்திகா (40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால், சில நாட்களுக்கு முன்பு தனது 2 வயது பெண் குழந்தையுடன், கார்த்திகா வீட்டை விட்டுச் சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்