நாமக்கல், ஜன. 24: நாமக்கல்லை அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டியில், ஒன்றிய திமுக சார்பில், மக்கள் கிராமசபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்து கொண்டு பேசும்போது, மாவட்டம் முழுவதும் மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளை திமுக கேட்டு வருகிறது. ரேசன் கடையில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதில்லை. முதியோர் உதவித்தொகை வழங்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டுகளை பெண்கள் அனைத்து ஊர்களிலும் கூறுகிறார்கள். இன்னும் 4 மாத காலத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்.