மகன் திருமணம் நாளை நடைபெற இருந்த நிலையில் மது அருந்தியதை கண்டித்ததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காட்டு பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் மோகன் (70). இவரது மகன் செந்திலுக்கு நாளை (25ம் தேதி) திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த மோகன், போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது மனைவி, ‘‘மகன் திருமணத்தை வைத்துக்கொண்டு மது அருந்துகிறீர்களே,’’  என்று திட்டியுள்ளார். இதில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோகன், வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: