திருப்பூர், ஜன. 22: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், மாநில செயலாளர் ராஜகோபாலன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் மணியன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்