தண்டையார்பேட்டை: கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (21), பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடகிருஷ்ணன் தெருவில் பூமாலை கடை நடத்தி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி பாட்டில் மணிக்கும் முன்விரோதம் காரணமாக, அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் சூரியபிரகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டளிகளை கத்தியால் வெட்டியுள்ளார். இந்நிலையில், சூரியபிரகாஷ் கடையில் வேலை பார்த்த எம்.சி.எம் கார்டன் பகுதியை சேர்ந்த குமாரி நேற்று இறந்ததால், அவரது இறுதி சடங்கில் பங்கேற்க சூரியபிரகாஷ் மற்றும் அவரது அண்ணன் ஜெயக்குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.