நண்பர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் கிணற்றில் மூழ்கி மண் எடுக்க முயன்றவர் பலி

சென்னை: சென்னை கே.கே.நகர் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர், நக்கீரன் தெருவை சேர்ந்தவர் பிரின்ஸ் (40). அங்குள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர், கூடுவாஞ்சேரி அடுத்த பெரிய அருங்கால் கிராமத்தை சேர்ந்த மோசஸ். நேற்று முன்தினம் மோசஸ் பிறந்தநாள் என்பதால், அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பிரின்ஸ் உள்பட நண்பர்கள் கலந்துகொண்டு, கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், நண்பர்கள் அனைவரும் மது அருந்தினர். பின்னர், மோசஸ் வீட்டின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் 20க்கும் மேற்பட்டோர், போதையில் குதித்து விளையாடினர்.

அப்போது, கிணற்றின் ஆழத்தில் உள்ள மண்ணை எடுத்து வருவதாக தனது நண்பர்களிடம் பிரின்ஸ் பந்தயம் கட்டினார். 2 முறை முயன்றும் மண் எடுக்கவில்லை. இதனால், நண்பர்கள் கிண்டல் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த பிரின்ஸ் மண் எடுக்காமல், வெளியே வரமாட்டேன் எனறு கூறி 3வது முறையாக கிணற்றில் குதித்தார். பின்னர் அவர், வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, தண்ணீரில் மூழ்கிய பிரின்சை சடலமாக மீட்டனர்.

Related Stories: