திருச்சி, ஜன.22: திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜன.23ம் தேதி (நாளை) ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம் என்று குடும்பநலம் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7904019938, 8838662019, 0431 - 2460695 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.