திருச்சி, ஜன.22: திருச்சி மாநகர் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் வரகனேரி பிச்சைநகரில் 10513 எண் கொண்ட டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் மற்றொரு டாஸ்மாக் கடையும் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். கடையை ஒட்டியுள்ள மதுக்கடை பாரும் பூட்டப்பட்டது. இந்நிலையில நேற்று மதியம் 12 மணிக்கு கடையை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையின் ஷட்டர் 2 பூட்டுகள் இரண்டும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று சோதனை செய்தபோது, கடையில் இருந்த மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட மதுவின் மதிப்பு ரூ.31,190 என தெரியவந்தது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் உள் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.