ஊட்டி,ஜன.22: ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சிக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்–்த மாதம் டெரஸ் பெட் பகுதிகளில் உள்ள ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்ட நிலையில், அவைகளை பராமரிக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.