அந்தியூர், ஜன. 22:அந்தியூர் அருகே பைக் மீது வேன் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் செல்வன் (58), ராஜன் (42). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு அந்தியூரில் இருந்து தங்களது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அத்தாணி தம்மங்கரடு என்ற இடத்தில் வரும்போது எதிரே அந்தியூர் சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (51) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேன் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.