சத்தியமங்கலம், ஜன.22: கடலூர் மாவட்டம் மூலகுப்பம் கிராமம் நடுவீராம்பட்டு காலனியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது 17 வயது மகள் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள விண்ணப்பள்ளி பகுதியில் இயங்கிவரும் தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் மூலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினரான விஷ்வா (20) என்ற வாலிபர் கடந்த ஜனவரி 11ம் தேதி மில்லுக்கு சென்று மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.