பாபநாசம், ஜன. 22: பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நீர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் , ஊராட்சி செயலர்கள், கிராம வறுமை ஒழிப்பு குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார ஊராட்சி கூத்தரசன், கிராம ஊராட்சி செல்வேந்திரன், பயிற்றுநர்கள் கவிதா, தேவி கலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் பங்கேற்று கிராம ஊராட்சிகளில் நீர் வள மேலாண்மை மேம்படுத்துவது குறித்து பேசினர். பயிற்சியில் பங்கேற்றவர் களுக்கு கையேடு வழங்கப்பட்டது.