மயான ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து பெரியகுளம் வட்டாட்சியர் ஆபீசில் முற்றுகை, தர்ணா போராட்டம்

பெரியகுளம், ஜன. 22: பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானக்கரை உள்ளது. இப்பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று தமிழ்புலிகள் கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடத்தினர்.

சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலா தலைமை வகிக்க, மாவட்ட துணை செயலாளர் பிரபாகரன், ஒன்றிய துணை செயலாளர் காளி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கெங்குவார்பட்டி மயானக்கரை, குள்ளப்புரம் மயானக்கரையை மீட்க கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கை மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: