பெரியகுளம், ஜன. 22: பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானக்கரை உள்ளது. இப்பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று தமிழ்புலிகள் கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடத்தினர்.