×

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 22: போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மீது எடுக்கபடும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலர் பால்பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் நடராஜன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டங்களில் பங்கேற்ற சங்க தலைவர்கள், நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மாநில அளவில் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலகங்கள் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags : Demonstration ,development ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்