பெரம்பலூர், ஜன.22: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், பாண்டகப்பாடி, வ.மாவலிங்கை, கை.களத் தூர், காரியானூர், பில்லங் குளம், அய்யனார் பாளையம், மேட்டுப்பாளையம், ரஞ்சன்குடி, சித்தளி, பேரளி, நாவலூர், இரட்டைமலை சந்து, குரும்பலூர், சத்திரம னை, பாடாலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட வனத்துறை கட்டுப் பாட்டிலுள்ள நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள காப்புக் காடுகளில் அரியவகைப் புள்ளி மான் கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றன. இவை உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனப் பகுதியை விட்டு வெளியேறி வயல்களில் திரியும்போது கிணறுகளில் தவறிவிழுந்து இறப்பதும், சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி இறப்பதும், ஊரு க்குள் நுழையும்போது தெரு நாய்களிடம் கடிபட்டு இறப்பதும் வாடிக்கையாக உள்ளன. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் துறைமங்கலம் ஏரிப் பகுதியிலிருந்து வந்து, கலெக்டர் அலுவலக சாலையில் சுற்றித் திரிந்த 2 வயது மதிக்கத்தக்க பெண்மான்ஒன்று, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழி யிலுள்ள குடியிருப்புகளில் புகுந்தது. அங்கு மானைப்பார்த்த தெருநாய்கள் அத னை துரத்திக் கடிக்கப் பாய்ந்தன. இதனால் மிரண்டு போன மான் தப்பிப் பிழைக்க நினைத்து தலைதெறி க்க ஓடியபோது அப்பகுதி யிலுள்ள வீட்டு சுவற்றில் மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.