காரைக்குடி, ஜன.22: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறை சார்பில் சமூக அறிவியல் ஆய்வு முறை தர வழிமுறைகள் என்ற தலைப்பில் இணையதளம் வாயிலாக கருத்தரங்கம் நடந்தது. உதவி பேராசிரியர் கனகவல்லி வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘சமூக பிரச்னைகளை தெரிந்துகொண்டு அதனை ஆய்வு செய்து அதற்குரிய தீர்வுகளை வழங்குவது சமூக அறிவியல் ஆய்வின் நோக்கமாகும். சமூகத்தை திறம்பட நிர்வகிக்க சமூக அறிவியல் ஆய்வின் பரிந்துரைகள் அரசிற்கு தேவைப்படுகிறது.