சிவகங்கை, ஜன.22: சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஊழியருக்கு ரூ.10லட்சம், உதவியாளருக்கு ரூ.5லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.