வேதாரண்யம், ஜன.22: வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு வனப்பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த ஆவாரம் பூக்கள் பூத்து குலுங்குகிறது. வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு வனப்பகுதியில் ஏராளமான மூலிகைச் செடிகள் இயற்கையாகவே வளர்ந்துள்ளது. இதில் முக்கியமாக ஆவாரம் பூ செடி என்பது மஞ்சள் பூக்களை கொண்ட செடியாகும். இந்த செடிகளில் உள்ள பூ மற்றும் இலைகள் சர்க்கரை நோய்க்கு மிகவும் ஏற்றது. இந்த ஆவாரம் செடிகளை மாட்டுப் பொங்கல் அன்று மாட்டின் கழுத்தில் கட்டுவதற்காக கொத்துக்கொத்தாக ஒடித்து வந்து ஆவாரம் பூ இலை கொத்து, நெல்லி தலை கொத்து ஆகியவற்றை மாலையாகத் தொடுத்து மாட்டின் கழுத்தில் கட்டுவார்கள்.