மதுரை, ஜன.22: மதுரையில் 2 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் சிவக்குமார் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை கிழக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்த தாசில்தார் கோபி, மதுரை ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு தாசில்தார்களும் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.