சின்னாளபட்டி, ஜன. 22: ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலர் உதவியாளர் பணிக்கு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதையடுத்து எம்ஏ, எம்பில், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஏ, பிகாம் படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ரெட்டியார்சத்திரம் மட்டுமி–்றி பழநி, திண்டுக்கல், ஆத்தூர், செம்பட்டி, சின்னாளபட்டி, வேடசந்தூர் பகுதிகளில் இருந்தும் பட்டதாரிகள் வந்து பெட்டியில் விண்ணப்பங்களை போட்டு விட்டு சென்றனர்.