நிலக்கோட்டையில் ரூ.1.5 கோடி நிதி மோசடியில் மேலும் ஒருவர் கைது

நிலக்கோட்டை, ஜன. 22: நிலக்கோட்டையில் அறக்கட்டளை என்ற பெயரில் ஆனந்த், ஜெயராஜ் உள்பட 5க்கும் மேற்பட்ஙடார் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் பொதுமக்களிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு ரூ.6100 கட்டினால் போதும் எனக்கூறி 300க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1.5 கோடிக்கும் மேல் பெற்றுள்ளனர். ஆனால் கடனும் வாங்கி தரவில்லை.

பணத்தையும் தர தாமதம் செய்து வந்தனர். இதுகுறித்த புகார்களின்பேரில் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயராஜ் (51), ஆனந்த் (32), காசியம்மாள் (45), மகாலட்சுமி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை (62) போலீசார், நேற்று கைது செய்தனர். மேலும் வடிவேலு என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: