தொழிலாளி கொலையில் மேலும் 3 பேர் கைது

கடத்தூர், ஜன.22: கடத்தூர் அடுத்த அஸ்தகிரியூர் கோம்பை பகுதியை சேர்ந்தவர் லோகிதாசன் (எ) முனியப்பன் (28). கூலி தொழிலாளி. இவர் கடந்த 16ம் தேதி, 5பேர் கொண்ட கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். இதுகுறித்து, கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடத்தூர் முத்தனூரை சேர்ந்த விவேகானந்தன், ரகுபதி, ரகு, முருகன், விஜய் ஆகியோர் போதையில் அவரை அடித்து கொன்றது தெரியவந்தது.  இதனையடுத்து, அவரது உறவினர்கள் கொலை குற்றவாளிகளை கைது செய்யு மாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விவேகானந்தன், ரகுபதியை கடந்த 17ம் தேதி போலீசார் கைது செய்தனர்.  மேலும், தலை மறைவாக இருந்த ரகு, முருகன், விஜய் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக, கடத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சேலம் விரைந்த போலீசார் நேற்று காலை ரகு (30), முருகன் (30), விஜய்(20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் கிளை சிறையில் மூவரையும் அடைத்தனர்.

Related Stories: