×

தைப்பூச விழா 2ம் நாளில் கழுகாசலமூர்த்தி பூத வாகனத்தில் வீதியுலா

கழுகுமலை, ஜன. 22:கழுகுமலையில் தைப்பூச விழாவின் 2ம் நாளான நேற்று முன்தினம் பூத வாகனத்தில் சுவாமி ரத வீதியுலா நடந்தது. கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 2ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை உள்ளிட்டவை நடந்தது. இரவு 8மணிக்கு மேல் பூத வாகனத்தில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையும் ரதவீதியுலா வந்து கம்மவார் திருமண மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கம்மவார் சமுதாய தலைவர் ராஜேந்திரன், ராமசுப்பு, துணைத்தலைவர் சிங்கராஜ், லிங்கப்பெருமாள், கம்மவார் பள்ளி செயலாளர் கண்ணன், முன்னாள் செயலாளர் சங்கரப்பன், தொழிலதிபர் சீனிவாசன், ஜேசிபி கனகராஜ், இளைஞரணி செயலாளர் விஸ்வநாகராஜன் மற்றும் சமுதாயத்தினர், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : festival ,Kalugasalamoorthy ,streets ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...