வேலூர், ஜன.22: வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, வட்டாரபோக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை சார்பில் ெஹல்மெட் விழிப்புணர்வு வேலூர் புதிய பஸ்நிலையம் செல்லியம்மன் கோயில் அருகே நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வேலூர் சரக போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ், ஆர்டிஓ செந்தில்வேலன், டிஎஸ்பி விநாயகம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்திவேல், வெங்கட்ராகவன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.