புழல்: செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி மணவாளன் (40, பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் அப்பகுதியில் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் செங்குன்றம் பைபாஸ் சாலையில் பிரபல தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் இங்கு வந்த செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி (40), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கினார். அப்போது அவர், ₹1 லட்சத்து 29 ஆயிரத்தை வங்கியில் செலுத்திவிட்டு சென்றார். நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை, வங்கி லாக்கரில் வைக்க ஊழியர்கள் எண்ணி சரிபார்த்தனர். அதில், நூற்று முப்பத்து நான்கு 200 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுக்கள் எனத் தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ₹26,800. இந்த கள்ள நோட்டுகளை செலுத்திய நபர் குறித்து விசாரித்தபோது, சேமிப்பு கணக்கு தொடங்கிய விஜயலட்சுமி என தெரியவந்தது.