மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 938 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 972 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியில் இருந்து, 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் 109.25 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 108.78 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 76.68 டிஎம்சியாக உள்ளது.
