செய்யாறு, ஜன.21: செய்யாறு அருகே ஏரியில் மூழ்கி அரிசி வியாபாரி பரிதாபமாக பலியானார்.
செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(38). நரசமங்கலம் பகுதியில் அரிசி கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீரா. இவர்களுக்கு பூஜா என்ற மகளும், கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். ஆன்மிகவாதியான வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை மாமண்டூர் ஏரிக்கு சென்று வழிபாடு செய்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.