விருதுநகர், ஜன.21: விருதுநகர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். விருதுநகர் அருகே வெள்ளூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(32). பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பைக்கில் மத்திய சேனை சென்று விட்டு ஊர் திரும்பி உள்ளார். அப்போது மேலாமத்தூர் அசேபா காலனி அருகில் பாலத்தில் நிலை தடுமாறி விழுந்தார்.