பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

விருதுநகர், ஜன.21: விருதுநகர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். விருதுநகர் அருகே வெள்ளூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(32). பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பைக்கில் மத்திய சேனை சென்று விட்டு ஊர் திரும்பி உள்ளார். அப்போது மேலாமத்தூர் அசேபா காலனி அருகில் பாலத்தில் நிலை தடுமாறி விழுந்தார்.

தகவல் அறிந்த மனைவி விஜி சம்பவ இடத்தில் இருந்து கணவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். பரிசோதித்த டாக்டர்கள் தமிழ்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆமத்தூர் போலீசில் மனைவி விஜி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: