ஏற்காடு, ஜன.21: ஏற்காட்டில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் நடநதது. இதையொட்டி ஒண்டிக்கடை, பஸ் நிலையம், காந்தி பூங்கா உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். குறவன் குறத்தி நடம் ஆடிய கலைஞர்கள், டூவீலரில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் செல்பவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும். முடிந்த அளவிற்கு பகல் நேரங்களில் பயணிப்பதுடன், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என பாடல்பாடி, நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் எஸ்ஐ ரகு மற்றும் போலீசார் பங்கேற்றனர்.