வரத்து குறைவு எதிரொலி புதன் சந்தையில்

மாடுகள் விலை உயர்வுசேந்தமங்கலம், ஜன.21: நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்,புதன்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் வியாபாரிகள் வருவார்கள். இந்த 2 நாட்களில் மட்டும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து குறைந்த அளவிலான மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.கேரளா, வெளி மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்க அதிகளவில் வியாபாரிகள் வந்தனர். இதனால் மாடுகள் விலை உயர்ந்தது. கறவை மாடு ₹45 ஆயிரத்துக்கும், இறைச்சி மாடுகள் ₹22 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ₹13 ஆயிரத்துக்கும் விற்பனையானது.மொத்தம் ₹2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Related Stories: