திருவள்ளூர்: ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் ராஜூ பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன், ரூ.2 லட்சம் அபராதமும் வழங்கி திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த ஜுலை மாதம் 12ம் தேதி 8வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டார். சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அசாமை சேர்ந்த 28 வயதான 5 ராஜுவுக்கு இரட்டை ஆயுள் வழங்கப்பட்டது.
