இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘முன்பு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வருவார்கள். தற்போது அப்படி வருவதாக தெரியவில்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக உள்ளதால் இரவில் சுலபமாகவும், துணிச்சலாகவும் வீடுகளில் புகுந்து பெண்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்துபணியை தீவிரப்படுத்தி திருடர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.