சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா

திருச்சி, ஜன.21:திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இவ்விழாவில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் சிவராசு தலைமை வகித்து சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் குறித்து விவரித்தார். முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வைத்தியநாதன் வரவேற்றார்.

Related Stories: