வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அழைப்பு

பேராவூரணி, ஜன.21: பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,07, 856 பேர், பெண் வாக்காளர்கள் 1,11,7 94, மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் ஆக மொத்தம் 2,19,661 பேர் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பேராவூரணி தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பார்வைக்காக இன்று முதல் (21ம்தேதி) வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் பிழையின்றி, இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள தவறியவர்கள் இன்று முதல் (21ம்தேதி) தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பிக்கலாம். மேலும் எதிர்வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், ஜன 26 குடியரசு தினத்தன்று கிராமங்கள் தோறும் நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டத்திலும், இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.

Related Stories: