திருவையாறு. ஜன.21: திருவையாறு அந்தணர்குறி–்சசியில் பயேமெட்ரிக் மெஷின் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரேஷன் பொருட்கள் பெறுவதில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திருவையாறு அந்தணர்குறிச்சியில் எண் 3 மற்றும் 4 ஆகிய எண் கொண்ட நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மூன்று தினங்களாக பொதுமக்களுக்கு ஷேன் பொருட்கள் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் சென்று கடையில் கேட்டால் பயோமெட்ரிக் இயந்திரம் பழுதாகி உள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறினால், பழுது சரிசெய்யும் மெக்கானிக்கை அனுப்புகிறோம் என்று கூறுகின்றனர் என்று நியாய விலைகடையில் வேலைபார்க்கும் சேல்ஸ்மேன் தெரிவித்தார்.