பைக் திருட்டு

காரைக்கால், ஜன. 21: காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த கீழவாஞ்சூரில் ஒடிசாவை சேர்ந்த விஸ்ல் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தை அருகில் மூடியிருந்த கடை முன் நிறுத்தி வைத்திருந்தார். அன்றிரவு இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றார். அப்போது அவரது வாகனத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: