×

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கமுதி, ஜன.21: கமுதியில் கே.என்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உணவே மருந்து என்ற தலைப்பில்விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
கமுதி கே.என். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் உணவே மருந்து என்ற தலைப்பில் அரசு சித்த மருத்துவர் பாலமுருகன் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார். உணவின் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது மற்றும்யோகாசனம், மூச்சுப்பயிற்சியின் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.பள்ளியின் தலைவர் மாணிக்க சஞ்சீவி, செயலாளர் பாபுசெல்வக்கனி, பொருளாளர் பரணிஆனந்த், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் தேவிஅனைவரையும் வவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் மாணவி சௌமியா நன்றி கூறினார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...