சீர்காழி, ஜன. 21: சீர்காழி அருகே ரயில் மோதி முதியவர் பலியானார்.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் உடையாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (80). இவர் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வைத்தீஸ்வரன் கோயில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பக்கிரிசாமி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பக்கிரிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: