சிவகங்கை, ஜன.21: சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான மனுக்கள் தொடர்ந்து பெறப்படும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது: சுருக்க திருத்தப்பணிகள் முடித்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதால் இனிமேல் மனுக்கள் பெறமாட்டார்கள் என எண்ண வேண்டாம். தொடர் திருத்தம் என்ற பணியின் அடிப்படையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நீக்கம் தொடர்பான புதிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.