பரமக்குடி, ஜன.21: பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான திறனாய்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரைச் செல்வி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.