டூவீலர் திருடிய வாலிபர் கைது

கமுதி, ஜன.21: சென்னை பகுதியில் டூவீலர் திருடிய ஒருவர் கமுதி அருகே கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரி பகுதியில் இரண்டு டூவீலர்களை திருடிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கமுதி பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

கமுதி அருகே கோவிலாங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கோவிலாங்குளம் அருகே திருட்டு டூவீலரில் வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த பூபாலன் (26) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்து அவரிடம் இருந்த டூவீலரை பறிமுதல் செய்தனர். மற்றொரு டூவீலரில் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: