உசிலம்பட்டி, ஜன.21: எழுமலை இன்ஸ்பெக்டர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். பேரையூர் தாலுகா எழுமலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் தினகரன் (50). இவர் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மதிய உணவு வேளையின் போது உடல் நிலை சோர்வான நிலையில் எழுமலை காவல் நிலையத்திலுள்ள குடியிருப்புக்கு வந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.