எழுமலை இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு

உசிலம்பட்டி, ஜன.21: எழுமலை இன்ஸ்பெக்டர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். பேரையூர் தாலுகா எழுமலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் தினகரன் (50). இவர் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மதிய உணவு வேளையின் போது உடல் நிலை சோர்வான நிலையில் எழுமலை காவல் நிலையத்திலுள்ள குடியிருப்புக்கு வந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இன்ஸ்பெக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம், சின்னமனூர் ஆகும். இவருக்கு ராதா என்ற மனைவியும், மகனும், மகளும், உள்ளனர். இவர் இன்னும் சில மாதங்களில் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறும் நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: