×

கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்

கோவில்பட்டி, ஜன. 21: கோவில்பட்டி  ஒன்றியத்திற்குட்பட்ட இடைசெவல், சத்திரப்பட்டி கிராமங்களில் அசில் இன கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட அறங்காவலர்  குழு தலைவர்  மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்.தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகரன், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, துணைசேர்மன் பழனிச்சாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளர் சவுந்தரராஜன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன் மற்றும் பாபு, ஆபிரகாம் அய்யாத்துரை, அருணாசலசாமி, போடுசாமி, ஆர்டிஓ விஜயா, தாசில்தார் மணிகண்டன், பிடிஓக்கள் சசிகுமார், ஐகோர்ட்ராஜா, மண்டல இணை இயக்குநர் மருத்துவர் சம்பத், கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் சங்கரநாராயணன் பங்கேற்றனர்.

Tags : Kadambur Raju ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!