உடன்குடியில் பொங்கல் கோலப்போட்டி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்

உடன்குடி,ஜன.21: உடன்குடி கொட்டங்காடு நாராயணபுரம் அதிமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு கோலப்போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் உம்பான் மனோகரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜ்குமார். முன்னாள் யூனியன் கவுன்சிலர் ராஜபூபதி, கனகராஜ், முத்து, சந்திரன், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு, கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தெற்கு மாவட்ட அதிமுக ஜெ.,பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி பேசினார். இதில் ஒன்றிய பொருளாளர் குலசை சங்கரலிங்கம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பொன்ராம், மாணவரணி செயலாளர் சதீஸ்வரன், ஜெ.பேரவை முன்னாள் செயலாளர் சாரதி, நகர ஜெ.பேரவை செயலாளர் ரெங்கன், தலைமை பேச்சாளர்கள் இன்பகரன், பால்துரை, ஆதியாக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் காமராஜ், கிளை செயலாளர்கள் சிவலூர் முருகன், ஆண்டிவிளை முத்துகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: