ஓட்டப்பிடாரம், ஜன.21: ஓட்டப்பிடாரம் அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள மேலலட்சுமிபுரம் காலனி தெருவைச் சேர்ந்த பச்சைபெருமாள் மனைவி மாரியம்மாள்(40). குறுக்குச்சாலை பஞ்சாயத்து கக்கரம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ம்தேதி மாரியம்மாள் ஸ்கூட்டியில் குறுக்குச்சாலையில் இருந்து ஓட்டப்பிடாரத்துக்கு தனியாக வந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே வரும்போது, அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் எடை கொண்ட 2 நகைகளை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து மாரியம்மாள் ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் நகை பறித்து சென்றவரின் அடையாளம் தெரிந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.