செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

கோவில்பட்டி, ஜன. 21: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் 69ம்ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு மஹா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி, யாகசாலை தீபாராதனை ஆகியவை நடந்தது.  10 மணிக்கு மேல் மதியம் 12 மணிக்குள் கோபுரம், அனைத்து விமானங்களுக்கு வருஷாபிஷேகமும், தொடர்ந்து மூலஸ்தான அம்பாள், சுவாமிக்கு வருஷாபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.  இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள் அலங்கார ஆராதனையும், நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் மாரிமுத்து, தக்கார் ரோஜாலிசுமதா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: